சீனக்கப்பலின் வருகயின் பின்னணியில் மகிந்த ராஜபக்ச.
![](https://meiveli.com/wp-content/uploads/2022/08/22-62e6cc46b9b58.jpg)
சர்ச்சைக்குரிய சீன கப்பல் விவகாரத்தில் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச செயற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சீனக்கப்பல் நாட்டிற்குள் நுழைவதற்கு அனுமதி வழங்கப்பட்டதன் பின்னணியில் அவரே செயற்பாட்டார் என்றும் கூறப்படுகின்றது.
சீன தூதுவர் மற்றும் இந்திய உயர் ஸ்தானிகர் ஆகிய இருவரும் கப்பல் விவகாரம் தொடர்பில் மகிந்த ராஜபக்சவுடன் கலந்துரையாடிய பின்னர் ,கப்பலை நாட்டிற்கு அனுமதிக்கவில்லை என்றால் சீனாவில் உள்ள இலங்கை தூதரக அலுவலகம் மூடப்படும் என்றும் சீனாவினால் இலங்கை மீது தடை கொண்டு வரப்படும் எனவும் போர்ட்சிட்டியில் இருந்து சீனா விலகிவிடும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசகரான சாகல ரத்நாயக்கவுக்கு தொலைபேசியில் தெரிவித்துள்ளார்.
இதனால் சீன கப்பலுக்கு அனுமதிக்குமாறு மகிந்த தெரிவித்து 2 மணித்தியாலங்களுக்குள் கப்பலுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.