வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்திக்கூட்டம் இன்று தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

இன்றைய கூட்டம் பிரதேச செயலக அபிவித்திக் குழுத்தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீபவானந்தராஜா தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது தெல்லிப்பழை வைத்தியசாலையின் புற்றுநோய் சிகிச்சை பிரிவு மற்றும் வைத்தியசாலை ஆகியவற்றை மத்திய அரசின் கீழ் கொண்டு வந்து அதனை மேம்படுத்தி மக்களுக்கு சேவை வழங்குவது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டது.

அத்துடன் தையிட்டி விகாரை, போக்குவரத்து விடயங்கள், காணிகளை விடுவித்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இருவருக்கும் இடையில் தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலை தொடர்பில் கட்டுமையான வாக்குவாதங்கள் இடம் பெற்றன.

அத்துடன் தையிட்டி விகாரை அமைந்துள்ள ஆணிகளை விடுவிக்க வேண்டும் என்ற விடயத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் இராமநாதன் அர்ச்சுனா ஆகியோருக்கு இடையிலும் பலத்த வாக்குவாதங்கள் ஏற்பட்டன.

இன்றைய கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான அர்ச்சுனா இராமநாதன், கஜேந்திரகுமார் பென்னம்பலம், அபிவிருத்தி குழுத் தலைவர் ஸ்ரீ பவானந்தராஜா வலி.வடக்கு பிரதேச செயலாளர், தவிசாளர், தெல்லிப்பளை பிரதேச செயலாளர் திணைக்கிள அதிகாரிகள் பொலிசார் உள்ளிட்ட பல துறை சார்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.