கந்தளாயில் முள்ளம்பன்றி இறைச்சியுடன் ஒருவர் கைது: நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின் பிணையில் விடுதலை!
கந்தளாய் யூசுப் - Sri Lanka - Reporter for MEIVELI

கந்தளாய், வென்ராசன்புர பகுதியில் உள்ள வீடொன்றில் முள்ளம்பன்றி கொல்லப்பட்டு இறைச்சியாக்கப்படுவதாகக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், கந்தளாய் வனவிலங்கு அலுவலக அதிகாரிகள் நேற்று (17) திடீர் சோதனையொன்றை மேற்கொண்டனர்.
இந்தச் சோதனையின்போது, முள்ளம்பன்றியைக் கொன்று இறைச்சியாக்கிக் கொண்டிருந்த சந்தேக நபர் ஒருவர் அதிகாரிகளால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன் போது கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து பின்வரும் பொருட்கள் வனவிலங்கு அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன:
10 கிலோகிராம் முள்ளம்பன்றி இறைச்சி,மறை கொம்பினால் (கோன அங்) செய்யப்பட்ட கத்தி என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நேற்று கந்தளாய் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போது, சந்தேக நபரை 1 இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுதலை செய்ய நீதவான் உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கு வரும் 19ஆம் திகதி மீண்டும் வி சாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக வனவிலங்கு அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

