எரிபொருள் விலைக்குப் பின்னால் இருக்கும் பாரிய வரி மோசடி: ஆனந்த பாலித தகவல்
Meiveli Media Team

சுத்திகரிப்பு நிலையத்தை மூடிவிட்டு எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்கள் மக்களைச் சுரண்ட அரசாங்கம் இடமளித்துள்ளது . முந்தைய அரசாங்கத்தின் விலைச் சூத்திரத்தை விமர்சித்தவர்கள், தற்போது அதைவிட மோசமான மறைமுக சுரண்டலை மேற்கொள்வதாகவும், ஒரு லீற்றர் எரிபொருளில் சுமார் 165 ரூபாய் வரி அறவிடப்படுவதாகவும் ஐக்கிய இணைந்த தொழிற்சங்க முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த பாலித தெரிவித்தார். இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தற்போதைய அரசாங்கத்தின் எரிசக்தி முகாமைத்துவம் மற்றும் விலை அதிகரிப்புகளைக் கடுமையாக விமர்சித்தார்.
லாப்ஃஸ் மற்றும் லிட்ரோ நிறுவனங்கள் ஒரு சிலிண்டரில் 1300 முதல் 1700 ரூபாய் வரை அதிக லாபம் ஈட்ட அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், பழைய கையிருப்புகளை வைத்துக்கொண்டு மூன்று முறை விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார். நாளொன்றுக்கு 6600 மெட்ரிக் தொன் கொள்ளளவு கொண்ட சுத்திகரிப்பு நிலையத்தை மூடிவிட்டு, ஐ.ஓ.சி உள்ளிட்ட வெளிநாட்டு நிறுவனங்கள் 20 வீதம் லாபம் ஈட்ட வழிவகை செய்யப்பட்டுள்ளது. அமைப்பை கட்டுப்படுத்துதல்’ என்ற பெயரில் நீர்கொழும்பு உள்ளிட்ட சில பகுதிகளில் நேற்று முதல் ஒன்றரை மணி நேர மின்வெட்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். சித்திரைப் புத்தாண்டுக்குப் பிறகு எரிபொருள் விலையை மீண்டும் பாரியளவில் அதிகரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அவர் எச்சரிக்கை விடுத்தார்.

