எல்ல பகுதியில் கடும் மழை – ராவண எல்ல நீர்வீழ்ச்சியில் நீர்ப்பெருக்கு அதிகரிப்பு
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

எல்லப் பகுதியில் தொடர்ச்சியாக கடுமையான மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக ராவண எல்ல நீர்வீழ்ச்சியில் நீர்ப்பெருக்கு கணிசமாக அதிகரித்துள்ளது.
தாழ்நிலப் பகுதிகளில் வசித்து வரும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயல்படுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். குறிப்பாக, வெள்ளப்பெருக்கு, மண்சரிவு மற்றும் திடீர் நீரோட்ட உயர்வு போன்ற அபாயங்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளதால் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.
நீர்வீழ்ச்சி , ஆறுகளின் அருகே செல்லாமல் தவிர்க்கவும், அவசர நிலை ஏற்பட்டால் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் வழங்கவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

