233 எம்எல்ஏக்களும் இன்னும் பதவி ஏற்கவில்லை.கொந்தளித்த மக்கள் நீதி மய்யம் கமல்

Meiveli Media Team

மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் தனது எக்ஸ் தளப் பதிவில் தமிழக அரசியல் சூழல் குறித்து முக்கியமான கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். இந்தத் தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் மக்கள் தனித்து ஆட்சி அமைக்கும் அதிகாரத்தை வழங்கவில்லை என்றும், இது தமிழக வரலாற்றில் இதுவரை நடந்திராத ஒரு முடிவு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மக்கள் தீர்ப்பை மதித்து, பொறுப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம் என்று அறிவித்த மு.க.ஸ்டாலினின் அரசியல் முதிர்ச்சியைத் தான் பாராட்டுவதாக தெரிவித்த கமல், அரசியலமைப்புப் பதவியில் இருப்பவர்கள் தங்களின் கடமையைச் சரியாகச் செய்ய வேண்டும் என்று நினைவூட்டியதோடு 108 இடங்களில் வென்றுள்ள விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக கழகத்தை ஆட்சி அமைக்க அழைக்காமல் இருப்பது மக்களின் தீர்ப்பை அவமதிக்கும் செயல் என்றும் கூறியுள்ளார்.233 உறுப்பினர்கள் இன்னும் பதவியேற்க முடியாமல் இருப்பது மாநிலத்திற்கு ஏற்பட்ட அவமானம் என்றும், ‘பெரும்பான்மையைச் சட்டமன்றத்தில் தான் நிரூபிக்க வேண்டும்’ என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பை ஆளுநர் பின்பற்ற வேண்டும் என்றும் கமல் ஹாசன் வலியுறுத்தியதோடு இது கட்சி அரசியல் அல்லஇ ஒரு குடிமகனாகத் தனது கொள்கைக் குரல் என்பதையும் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார்.