பொதுமக்கள்  ஒது;துழைத்தால்  கியூ.ஆர். முறைமை அவசியமில்லை:அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவிப்பு

Meiveli Media Team

தற்போது நிலவும் உலகளாவிய எரிபொருள் நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, பொதுமக்கள் தங்களின் தினசரி எரிபொருள் பயன்பாட்டைத் திட்டமிட்டு சிக்கனமாக மேற்கொண்டால், அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள கியூ.ஆர். முறைமை போன்ற கட்டுப்பாடுகள் அவசியமற்றதாகிவிடும் என கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார். இந்த எரிபொருள் தட்டுப்பாடு இலங்கைக்கு மட்டும் உரித்தானதல்ல. இது ஒட்டுமொத்த உலகையும் பாதித்துள்ள ஒரு சவாலாகும். எனவே, சமூகமாக ஒன்றிணைந்து இந்த நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டியது அவசியம் எனவும் குறிப்பிட்டார். கடந்த மாதத்துடன் ஒப்பிடும் போது, இந்த மாதம் எரிபொருள் பயன்பாட்டை 20 வீதம் முதல் 30 வீதம் வரை குறைத்துக்கொள்வது ஒவ்வொரு குடிமகனின் பொறுப்பாகும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதுடன், முடிந்தவரை பொதுப் போக்குவரத்துச் சேவைகளைப் பயன்படுத்துவதன் மூலம் நாட்டின் எரிபொருள் தேவையை பெருமளவு குறைக்க முடியும். கியூ.ஆர். முறைமை, கூப்பன்கள் அல்லது ஒதுக்கீட்டு முறை என்பது தொழில்நுட்ப ரீதியான கருவிகள் மட்டுமே. மக்கள் மனமுவந்து தங்களின் எரிபொருள் பயன்பாட்டைக் குறைத்துக்கொண்டால், இத்தகைய தொழில்நுட்பக் கட்டுப்பாடுகள் அவசியமில்லை எனத் தெரிவித்தார். சுகாதாரம்இ பாதுகாப்பு, பொதுப் போக்குவரத்து மற்றும் உற்பத்தித் துறை ஆகிய அத்தியாவசிய சேவைகள் தடையின்றி இயங்குவதை உறுதி செய்ய, சாதாரண குடிமக்கள் தங்களின் தனிப்பட்ட எரிபொருள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டார். இந்த நெருக்கடியானது வெளிநாடுகளில் இருந்து வந்த சவாலாகும். சமூகமாக நாம் இணைந்து செயற்பட்டால், அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப முடியும்.மக்கள் இந்த தியாகத்தைச் செய்யத் தவறினால், நெருக்கடி தீவிரமடைய வாய்ப்புள்ளது எனவும் சுட்டிக்காட்டினார்.