ஹட்டன் மற்றும் நுவரெலியாவில் QR முறைமை ஊடாக எரிபொருள் விநியோகம்.
ச. ஞான பிரசாந்தன் -இலங்கை - Colombo Reporter for MEIVELI

நாட்டில் நேற்று(15) காலை 06 மணி முதல் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் QR குறியீட்டு முறைமையின் ஊடாக எரிபொருள் விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது,
இதற்கு அமைவாக இன்று (16) காலை முதல் ஹட்டன் மற்றும் நுவரெலியாவில் உள்ள எரிபொருள் நிலையங்களில் QR குறியீட்டு முறைமையின் ஊடாக எரிபொருள் விநியோகிக்கும் நடவடிக்கை இடம்பெற்று வருகிறது.
மேலும் வாகன நெரிசலைக் கட்டுப்படுத்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
குறிப்பாக நுவரெலியா பிரதான நகரில் எரிபொருள் நிலையங்களில் வாகனங்கள் வரிசை இன்றி பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ள தேவையற்ற பதற்றம் குறைந்து அமைதியான முறையில் எரிபொருள்களை நிரப்பி வருகின்றனர்

