ஈரான் தனது புதிய உச்ச தலைவராக மொஜ்தபா கமேனியை நியமித்துள்ளது
Meiveli Media Team

அமெரிக்கா- இஸ்ரேலிய கூட்டுத் தாக்குதல்களில் அயதுல்லா அலி கமேனி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து அந்த இடத்திற்கு அயதுல்லா அலி கமேனியின் மகன் நியமிக்கப்பட்டுள்ளார். ஒருவாரத்தின் பின்னர் ஈரான் தனது புதிய உச்ச தலைவராக மொஜ்தபா கமேனியை நியமித்துள்ளது. இஸ்லாமிய குடியரசின் 47 ஆண்டுகால வரலாற்றில் மிகப்பெரிய நெருக்கடியின் மூலம் அதை வழிநடத்தும் பொறுப்பு இப்போது 56 வயதுடைய மொஜ்தபா கமேனி ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த நியமனம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மதகுருமார்களால் அவரது தந்தையின் வாரிசாக நியமிக்கப்பட்டார். ஈரானின் முக்கியத் தலைவர்களும், ஈரானின் சக்திவாய்ந்த இஸ்லாமிய புரட்சிகர காவல்படை ஐஆர்ஜிசி மற்றும் ஆயுதப் படைகளும் புதிய தலைவருக்கு தங்கள் ஆதரவை விரைவாக வழங்குவதாக உறுதியளித்தன. அமெரிக்காவும் இஸ்ரேலும் தங்கள் முழு வீச்சில் தாக்குதலைத் தொடங்கியதிலிருந்து ஈரானின் பாதுகாப்பு மூலோபாயத்தை வழிநடத்தும் பணியில் ஈடுபட்டுள்ள உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளர் அலி லாரிஜானி, புதிய உச்ச தலைவரைருக்கு ஆதரவை வழங்க ஈரான் மக்களிடம் ஒற்றுமைக்கு அழைப்பு விடுத்தார். ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் கலிபாஃப் இந்த தேர்வை வரவேற்று, புதிய உச்ச தலைவரைப் பின்பற்றுவது மத மற்றும் தேசிய கடமை என்று கூறினார். மொஜ்தபா கமேனி ஒருபோதும் பதவிக்கு போட்டியிடவில்லை அல்லது பொது வாக்கெடுப்புக்கு உட்படுத்தப்படவில்லை, ஆனால் பல தசாப்தங்களாக உச்ச தலைவரின் உள் வட்டத்தில் மிகவும் செல்வாக்கு மிக்க நபராக இருந்து வருகிறார். இவர் அங்கிகளுக்குப் பின்னால் உள்ள சக்தி என்று வர்ணிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

