ஆழ்கடலில் போதைப்பொருள் கடத்தியதாக சந்தேகிக்கப்படும் உள்ளூர் பல நாள் மீன்பிடிக் கப்பலை கடற்படை கைப்பற்றியது

இலங்கை கடற்படைக்கு கிடைத்த நம்பகமான தகவலின் அடிப்படையில், இலங்கையின் மேற்கு ஆழ்கடலில் நடத்தப்பட்ட ஒரு சிறப்பு நடவடிக்கையின் விளைவாக, போதைப்பொருள் பொதிகளை கொண்டு சென்றதாக சந்தேகிக்கப்படும் உள்ளூர் பல நாள் மீன்பிடிக் கப்பலுடன் ஆறு (06) சந்தேக நபர்களும் கைப்பற்றப்பட்டதுடன், பல நாள் மீன்பிடிக் கப்பலும் சந்தேக நபர்களும் தற்போது மேலதிக விசாரணைக்காக கரைக்கு கொண்டு வரப்பட்டனர்.