பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் ஆர்ப்பாட்டம்

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்காமையினால், இன்று (02) முற்பகல் முதல் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் இலங்கை பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தினால் ஆர்ப்பாட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட குழுவினருடன் இணைந்து இந்தப் போராட்டத்தை முன்னெடுப்பதாக இலங்கை பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம் தெரிவித்துள்ளது.