2,000 ரூபா நாணயத்தாள்கள் நீக்கம்.

இந்தியாவில் 2,000 ரூபாய் நாணயத்தாள்களை திரும்ப பெற ரிசர்வ் வங்கி முடிவு செய்து இருக்கிறது.

விரைவில் 2,000 ரூபாய் நாணயத்தாள்கள் புழக்கத்தில் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், செப்டம்பர் 30 ஆம் திகதிக்குள் 2,000 ரூபாய் நாணயத்தாள்களை வங்கிகளிடம் கொடுத்து பொது மக்கள் மாற்றிக்கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்தது.

ரிசர்வ் வங்கி புதிய அறிவிப்பை தொடர்ந்து, செப்டம்பர் 30 ஆம்  திகதிக்கு பிறகு 2,000 ரூபாய் நாணயத்தாள் இந்தியாவில் சட்டப்பூர்வ பணபரிவர்த்தனைக்கு செல்லாது.

இந்த நிலையில், 2,000 ரூபாய் நாணயத்தாள் நோட்டுக்களை மாற்றிக் கொள்வதற்காக ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்து இருக்கிறது.