நியூ டைமண்ட் கப்பலை விடுவித்தமை தொடர்பில் கோட்டபாய பதில் சொல்ல வேண்டும்.

இலங்கை கடலில் விபத்துக்குள்ளான நியூ டைமண்ட் கப்பலை விடுவிக்க உத்தரவிட்டது யார் என்பது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ அறிவிக்க வேண்டும் என்றும் இல்லையேல் அவர் மீது சந்தேகிக்க நேரிடும் என்றும் எதிர் கட்சியில் சுயாதியீனமாக இயங்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவைச் சேர்ந்த சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற இலங்கை கடற்பரப்பில் விபத்துக்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலால் ஏற்பட்ட பாதிப்புக்கான நட்டஈடு தொடர்பான இரண்டாம் நாள் சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்று போது அவர் இதனை தெரிவித்தார்.

எக்ஸ்பிரஸ் கப்பலால் எமது கடல் சார் சுற்றாடலுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு தற்போது மதிப்பிட்ட நட்டஆட்டுத் தொகை போதுமானது அல்ல அதனால் பாதிப்புகளுக்கு ஏற்றவாறு முறையான மதிப்பீடுகளை செய்து நட்ட ஈட்டை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதே வேளை இதற்கு முன்னர் விபத்துக்குள்ளான நியூ டைமண்ட் கப்பல் தொடர்பில் இந்த நாடாளுமன்றத்தில் பேசப்படுகின்றது அந்தக் கப்பலை விடுவிப்பதற்கான அப்போதைய வெளிவிவகார அமைச்சர் ஊடாக அப்போதைய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச நடவடிக்கை எடுத்ததாக அவர் மீது நீதி அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார். இதனால் முன்னாள் ஜனாதிபதி இது தொடர்பில் பதிலளிக்க வேண்டும் இல்லாவிட்டால் அந்த கப்பலை அவரின் உத்தரவின் பேரிலேயே விடுபட்டுள்ளதாக கருத வேண்டி வரும் என்றார்.