அரசாங்கத் தரப்புக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையில்   வாதம்:  சஜித் பிரேமதாசவின் கேள்விக்கு பிரதமர் பதில்

இலங்கை நாடாளுமன்றத்தில்  தேர்தல்களை நடத்துவது தொடர்பில் அரசாங்கத் தரப்புக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையில்  வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன. இதன்போது, நீதிமன்றம், உள்ளூராட்சி சபைகளுக்கான நிதியை வழங்குமாறு உத்தரவிட்டுள்ள நிலையில் அரசாங்கம் அதனை புறக்கணிப்பதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தினார்.

மேலும், உள்ளூராட்சி சபைகளுக்கான நிதியை எப்போது விடுவிக்க அரசாங்கம் எதிர்பார்க்கிறது என்று அவர் கேள்வி எழுப்பினார்.இந்த நிலையில் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ள சுமார் மூன்றாயிரம் அரச பணியாளர்களுக்கு இரண்டு மாத வேதனங்கள் கிடைக்கவில்லை.அது கிடைப்பதற்கு வழியேற்படுத்த வேண்டும் என்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் கோரிக்கை விடுத்தார். நீதிமன்றத்தில் இது தொடர்பில் பல வழக்குகள் இருப்பதாக கூறிய அவர், நீதியின் அடிப்படையில் அரசாங்கம் செயற்படுகிறது என்று குறிப்பிட்டார்.

அரசாங்கம், நீதிமன்றம் செல்லவில்லை என்றும் எதிர்க்கட்சியே நீதிமன்றம் சென்றதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். நாடாளுமன்றத்தில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில், உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களை விரைவில் அழைத்துப் பேச்சு நடத்த எதிர்பார்த்துள்ளதாக  பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.

நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்பில் தான் கருத்துக் கூற முற்படவில்லை எனினும், தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களை அழைத்து தேர்தல் சம்பந்தமாக கலந்துரையாட எதிர்பார்ப்பதாகவும், விரைவில் இந்தச் சந்திப்பு நடைபெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.