சிவனொளிபாதமலை-தொதல் பொதியில் இறந்த எலி.

சிவனொளிபாதமலைக்கு யாத்திரிகர்களாக வருகைதந்தவர்களில் சிலர், நல்லத்தண்ணி நகரில் உள்ள இனிப்பு பண்டங்களை விற்பனை நிலையமொன்றில் தொதல் உள்ளிட்ட இனிப்பு பண்டங்களை கொள்வனவுச் செய்துள்ளனர்.

அதனை உண்பதற்காக, எடுத்து வெட்டிய போது அந்த தொதல் பொதியில் இறந்த நிலையில் எலி இருப்பதை அவதானித்து உள்ளனர்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் கவனம் செலுத்தி சம்பந்தப்பட்ட வர்த்தக நிலையம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை பாதிக்கப்பட்டவர்கள்  விடுக்கின்றனர்.