13 ஆவது திருத்தத்தின் ஊடாகத் தமிழர்களுக்கு தீர்வை வழங்க முடியாது:

தமிழர்களின் பிரச்சினைகளுக்கு அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் ஊடாகத் தீர்வை வழங்க முடியாது. அனைத்து இன மக்களும் ஏற்றுக்கொள்ளக் கூடிய புதிய அரசமைப்பின் ஊடாகவே தமிழர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வைப் பெற முடியும் என ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

தமிழர்களின் பிரச்சினைகளுக்கு 13 ஆவது திருத்தத்தின் ஊடாக – மாகாண சபைகளின் ஊடாக தீர்வைப் பெற முடியும் என்று நீங்கள் நம்புகிறீர்களா?’ என்ற  தெற்கு ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இருக்கின்ற அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் ஊடாகவோ – அதில் அதிகாரத்தைக் கூட்டியோ அல்லது குறைத்தோ தமிழர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்க முடியாது. தெற்கு மக்கள் நிராகரிக்கும் தீர்வு ஒருபோதும் தமிழர்களுக்கான தீர்வாக அமையாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கூறியுள்ள நிலையில்தற்போதைய அரசால் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு ஒருபோதும் தீர்வு வழங்க முடியாது. தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் தமிழர்களுக்குத் தீர்வு கிடைத்தே தீரும் என அவர் மேலும் தெரிவித்தார்.