தான் அதிபரானால் ரஹ்ய போரை உடன் நிறுத்துவேன்: டொனாலட் ரம்ப் சவால்

தற்போது அமெரிக்க அதிபராக இருக்கும் ஜோ-பைடனின் பதவிக் காலம் அடுத்த ஆண்டு நிறைவடைய உள்ளது. இதையடுத்து அடுத்த அதிபரை தேர்வு செய்வதற்கான நடவடிக்கைககள் இப்போதே தொடங்கி விட்டன. இந்த தேர்தல் களத்தில் முன்னாள்
அதிபர் டொனால்ட் டிரம்பும் இறங்கியுள்ளார்.
ரஷ்யாவை சீனாவின் கைகளுக்குள் தூக்கிக் கொடுத்ததே பைடன் தான் என்கிறார் டிரம்ப். அதோடு தான் அதிபராக இருந்திருந்தால் ரஷ்ய-உக்ரைன் போரே ஏற்பட்டிருக்காது என்றும், ஏன் என்றால் தான் என்ன சொன்னாலும் ரஷ்ய அதிபர் புதின் கேட்பார் என்றும் பேசியுள்ளார் டிரம்ப். வரும் 2024 ஆம் ஆண்டு தான் அமெரிக்காவின் அதிபர் ஆனால் அமெரிக்காவிற்கு மட்டுமல்ல உலகிற்கே பல நன்மைகள் வந்து சேரும் என்று அடித்துச் சொல்கிறார் டிரம்ப்.தான் அதிபராக தேர்வு செய்யப்பட்டால் புதினுடன் பேசி வெறும் 24 மணி நேரத்தில் போரை நிறுத்தச்
செய்ய முடியும் என்றும் கூறியுள்ளார் டிரம்ப்.
தற்போதைய அமெரிக்க அரசு போரை ஒழுங்காக கையாளவில்லை எனக் குற்றம் சாட்டியுள்ள அவர், இப்போது உக்ரைனுக்கு ராணுவ உதவிகளை வழங்கி வரும் பைடன், அடுத்து அணு ஆயுதங்களை வழங்குவார் என்றும், இது உலகிற்கே பேராபத்தாய் முடியும் என்றும் எச்சரிக்கை செய்திருக்கிறார்.