எப்போதும் போல் அச்சமின்றி செயல்படுவோம்.! பிபிசி டிவீட்.!

பிபிசியில் வருமானவரி துறையினர் மேற்கொண்ட வருமானவரி துறை சோதனை நிறைவு பெற்றதாக பிபிசி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் கடந்த 3 நாட்களாக வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வந்தனர். இந்த வருமான வரி சோதனை இன்று அந்த சோதனை முடிவுக்கு வந்தது. இதுகுறித்து பிபிசி தனது டிவிட்டர் பக்கத்தில் அந்த தகவலை பகிர்ந்துள்ளது.

அதில் , வருமான வரிதுறை அதிகாரிகள் டெல்லி மற்றும் மும்பையில் உள்ள எங்கள் அலுவலகங்களை விட்டு வெளியேறிவிட்டனர். நாங்கள் அதிகாரிகளுடன் தொடர்ந்து ஒத்துழைப்பை அளிப்போம். விரைவில் இந்த விவகரங்கள் தீர்க்கப்படும் என்று நம்புகிறோம். எனவும் ,

தற்போது நாங்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளோம். இந்தியாவிலும் அதற்கு அப்பாலும் உள்ள எங்கள் பார்வையாளர்களுக்கு சேவை செய்வதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். பிபிசி ஒரு நம்பகமான, சுதந்திரமான ஊடக அமைப்பு. நாங்கள் எங்கள் சக ஊழியர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு ஆதரவாக எப்போதும் நிற்கிறோம். அவர்கள் எப்போதும் அச்சம் அல்லது தயவு இல்லாமல் தொடர்ந்து செய்திகளை தயார் செய்வார்கள். என குறிப்பிடப்பட்டுள்ளது.