பிலிப்பைன்ஸ் நாட்டில் 6.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்-49 பேர் படுகாயம் .

பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நாட்டின் மாஸ்பேட் தீவில் உள்ள மியாகா என்ற இடத்தில் 11 கி.மீட்டர் ஆழத்தில் உள்ளூர் நேரப்படி அதிகாலை 2 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியுள்ளது.

நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் அயர்ந்து தூங்கிக் கொண்டு இருந்த மக்கள் பீதியில் உறைந்தனர். நிலநடுக்கத்தை தொடர்ந்து சுமார் 1 மணி நேரம் கழித்து பின் நில அதிர்வுகள் ஏற்பட்டன. இதனால் பல இடங்களில் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தால் 49 பேர் காயமடைந்துள்ளனர்.

துருக்கியில் கடந்த வாரம் ஏற்பட்ட 3 சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் இதுவரை 41,000 பேர் பலியாகினர். அதே போல் நியூசிலாந்தில் 6.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் நேற்று ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.