முன்னாள் பாப்பரசர் பெனடிக்ட் காலமானார்.

ஓய்வுநிலை பாப்பரசர் 16 ஆம் பெனடிக்ட்  தனது 95 ஆவது வயதில் காலமானார்.

உடல்நலக்குறைவு காரணமாக பதவி விலகி கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்திற்கு பின்னர் உடல்நலக்குறைவு காரணமாக அவர் வாட்டிகன் இல்லத்தில்  நித்திய இளைப்பாறுதல் அடைந்தார்.

2005 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை 16 ஆவது ஆசிர்வாதப்பர், பாப்பரசராக இறைபணியில் ஈடுபட்டிருந்தார்.

2013 இல் அவர் பாப்பரசர் நிலையில் இருந்து தாமாக பதவி விலகினார்.  1415 ஆண் ஆண்டில் 12 ஆம் கிரிகோரிக்கு பின்னர் பாப்பரசர் பதவியிலிருந்து விலகியவராக முன்னாள் பாப்பரசர் 16 ஆம் பெனடிக்ட் வரலாற்றில் பதிவானார்.

பெனடிக்ட் தனது இறுதிக் காலத்தை வத்திக்கானின் சுவர்களுக்குள் உள்ள மேட்டர் எக்லேசியா (Mater Ecclesiae)மடாலயத்தில் கழித்தார்.

ஜோசப் ராட்ஸிங்கர் என்ற இயற்பெயருடன் ஜேர்மனியில் பிறந்த அவர், 78 வயதில் ( 2005 ஆம் ஆண்டு) தெரிவுசெய்யப்பட்ட மிக வயதான பாப்பரசர் என்பது குறிப்பிடத்தக்கது.