தமிழ், முஸ்லிம் மக்களின் தீர்க்கப்படாத புதிய பிரச்சினைகளுக்குத் தீர்வு: பிரதமர் தினேஷ் தெரிவிப்பு.

தமிழ், முஸ்லிம் மக்களின் தீர்க்கப்படாத புதிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம்’ – என்று பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.பெரும்பாலும் பொருளாதார நெருக்கடிகள் அரசியல் நெருக்கடிகளுக்கு வழிவகுக்கும்.

இங்குள்ள சிறுபான்மை சமூகங்களில் இருந்து உங்களுக்கு எவ்வாறான ஆதரவு கிடைக்கிறது? எதிர்காலத்திலும் இதேபோன்ற ஆதரவை அனுபவிப்பீர்கள் என்று நினைக்கிறீர்களா?’ என ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளித்த பிரதமர் தினேஷ் குணவர்த்தன, இலங்கையும் இந்தியாவும் உலகின் மிகப் பழமையான ஜனநாயக நாடுகளாக உள்ளன. இங்கு மக்கள் அரசுகளைத் தேர்ந்தெடுப்பதுடன், பதவி நீக்கவும் செய்துள்ளனர்.இலங்கை அரசமைப்பின்முன், அனைவரும் சமம்.தமது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டால் எவரும் சவால் விடலாம்.

ஆகவே, கடந்த சில மாதங்களில் நிலவிய ஜனநாயக அமைதியின்மைக்குப் பதிலளிப்பதில் இப்போது அதிக நம்பிக்கை உள்ளது என்று  நினைக்கிறேன் எனக் குறிப்பிட்டார்.  யாராக இருந்தாலும், எந்த இனத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் மக்கள் மத்தியில் எங்கள் நம்பிக்கையை முழுமையாக மீட்டெடுத்துள்ளோம். குடிமக்கள் அனைவரும் பிரார்த்தனை செய்த எங்கள் சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைமையை எங்களால் மீண்டும் கொண்டு வர முடிந்தது. அரசின் மீது அளப்பரிய நம்பிக்கை உள்ளதுடன், நாட்டின் வடக்கு, கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சிகளுடனும், எதிர்க்கட்சிக்குள் இருக்கும் அரசியல் குழுக்களுடனும் நாங்கள் இணைந்து செயற்படுகின்றோம்.

எவருக்கும் பாரபட்சம் கிடையாது.வடக்கு மக்களோ அல்லது தமிழ் பேசும் மக்களோ அல்லது முஸ்லிம் மக்களோ என அனைவரும் முன்வைத்த வேறு சில பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு, தீர்க்கப்படாத புதிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம் எனத் தெரிவித்தார்.