அரசியில் நாடகம் போடும் மைத்திரி ,ரணில் ,மற்றும் சுமந்திரன் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவிப்பு .

மைத்திரி  ரணிலுக்கும் மற்றும் ரணில்  சுமந்திரனுக்கும் இடையில் இருக்கும் பிரச்சினைகள் விமர்சனங்களும் இருக்கிறது என்பது அரசியல் நாடகங்களாகும் என்று  தமிழ் தேசிய  மக்கள்  முன்னணியின்  தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

இந்த மூன்று தரப்பினர்களும் அன்று ஒன்றிணைந்தது தமிழ் மக்களை ஒற்றையாட்சிக்குள் முடக்குவதற்கு செய்த சதி அம்பலமாகிய நிலையில் இன்று மாவட்ட அபிவிருத்தி சபை அமைப்பது எனும் புதிய உத்தியில் இந்த மூன்று புள்ளிகளும் மீண்டும் சந்திப்பது என்பது மற்றொரு அரசியல் நாடகமாகும்.

இந்த நாடகத்தை எங்களுடைய மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். எதிர்வரும் காலத்தில் தீர்வு என்னும் பேரில் வரும் போகும் சதி முயற்சியாகும். சமஷ்டி ஆட்சி எனும் போர்வைக்குள் தீர்வு கொண்டு வரப்போவதாக  கூறிக்கொண்டு எங்களுடைய விருப்பத்தின் பேரில் நாட்டில் ஒற்றையாட்சியை கொண்டு வருவதற்கான சதி இடம்பெறவிருக்கிறது.

தமிழ் கட்சிகளுடைய ஆதரவினை பெற்றுகொண்டு எதிர்கொள்ள உள்ள நெருக்கடிகளுக்கு  சர்வதேச நாடுகளுடைய ஆதரவினை பெற்றுக்கொள்ள கூடிய இந்த சூழ்ச்சியை புரிந்துகொள்ளாமல் தமிழ் கட்சிகள் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தைக்கு செல்வது என்பது தமிழ் கட்சிகள் மற்றும் தமிழ் மக்களையும் பாரியதொரு பின்னடைவுக்கு இட்டுச்செல்லும்.

தமிழ் மக்கள் தமிழ் கட்சிகளுடைய அரசியல் நாடகங்களுக்குள் சிக்கிக்கொள்ளாமல் இனியாவது அரசியல் தலைவிதியை தங்களுடைய  கைகளுக்கு எடுக்க வேண்டும் என்றார்.