FIFA-உருகுவே அணியை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறியது போர்ச்சுக்கல்.

உலகக் கோப்பை கால்பந்து  நேற்று நள்ளிரவு தோகாவில் உள்ள லூசைல் ஸ்டேடியத்தில் நடந்த ‘ஜி’ பிரிவு லீக் ஆட்டத்தில் போர்ச்சுக்கல் மற்றும் உருகுவே அணிகள் மோதின. 2-வது வெற்றியுடன் நாக் அவுட் சுற்றுக்கு தகுதிபெறும் முனைப்பில் போர்ச்சுக்கல் அணி களமிறங்கியது. அதேபோல் முதல் வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் உருகுவே அணி களம் கண்டது.

பரபரப்பாக தொடங்கிய முதல் பாதி ஆட்டம் இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்த முயற்சிகள் தோல்வி அடைந்தன. அடுத்து தொடங்கிய இரண்டாவது பாதி ஆட்டத்தில் போர்ச்சுக்கல் அணியின் வீரர் புருனோ பெர்னாண்டஸ் ஆட்டத்தின் 54 நிமிடத்தில் கோல் அடித்து அசத்தினார். தொடர்ந்து இரு அணிகளும் கடுமையாக மோதிக்கொண்டன. இந்நிலையில் ஆட்டத்தில் 90+3 நிமிடத்தில் புருனோ பெர்னாண்டஸ் தனது 2-வது கோலை போட்டு ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தினார். இதனையடுத்து போர்ச்சுகல் அணி 2-0 என்ற கோல் கணக்கில் உருகுவேயை வீழ்த்தி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது.