அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையிலான 20 வயது ஆண்கள் கால்பந்தாட்ட போட்டியில் யாழ் புனித பத்திரிசியார் கல்லூரி சாம்பியன்.

அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையிலான 20 வயது ஆண்கள்கால்பந்தாட்ட போட்டியில் யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி சம்பியனாகியுள்ளது.

இறுதிப்போட்டியில் பலம் பொருந்திய மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியுடன் மோதிய யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி 1 : 1 என்ற கோல் சமநிலையை தொடர்ந்து நடந்த பெனால்டி உதையில் வெற்றியீ்ட்டி சம்பியனாகியுள்ளது.

இறுதிப்போட்டியில் வடக்கு மாகாணத்தின் பலம்வாய்ந்த பாடசாலை அணிகள் விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது,