பொது தகவல் தொழில்நுட்ப (GIT) பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

பொது தகவல் தொழில்நுட்ப (GIT) பரீட்சைக்கு தோற்றும் பாடசாலை மற்றும் தனியார் பரீட்சார்த்திகளுக்கு, பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த கால அவகாசம் எதிர்வரும் நவம்பர் மாதம் 25ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் அறிக்கையொறின் ஊடாக அறிவித்துள்ளது.

2019, 2020, 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் 12 ஆம் வகுப்பு படித்த மாணவர்கள் மட்டுமே இந்த பரீட்சைக்கு விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பங்களையும் தமது பாடசாலையின் அதிபரால் மட்டுமே சமர்ப்பிக்க முடியும் எனவும், விண்ணப்பதாரர்கள் தனிப்பட்ட முறையில் இந்த பரீட்சைக்கு தோற்ற முடியாது எனவும் பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.

2022ம் ஆண்டுக்கான (2023) கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை நடைபெறும் காலத்தில் இந்த பரீட்சை  நடத்தப்படாது எனவும், பரீட்சை  நடைபெறும் திகதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான எந்தவொரு விசாரணையையும் பின்வரும் தொலைபேசி எண்ணுக்கு தெரிவிக்கலாம்.மேலதிக தகவல்களை அறிந்து கொள்ள பின்வரும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும்

நேரடி தொலைபேசி எண் – 1911

0112 786 616 / 0112 784 537 / 0112 784 208

தொலைநகல் – 0112 784 422

பொது தொலைபேசி இலக்கங்கள் – 0112 786 200 / 0112 784 201 / 0112 785 202