அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிரான போராட்டம் கொழும்பில் ஆரம்பம்..!

அரசாங்கத்தின் அடக்கு முறை போக்கை உடனடியாக நிறுத்தக் கோரியும் , பயங்கரவாத தடை சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் இன்று (02) கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சன்று முன்னர் மருதானை எல்பிஸ்டன் திரையரங்கம் அருகே இருந்து இந்த ஆர்ப்பாட்டம் பேரணி ஆரம்பித்துள்ள நிலையில், அங்கிருந்து தொழில்னுட்ப சந்தி ஊடாக ஆர்ப்பாட்டப் பேரணியானது கோட்டை ரயில் நிலையம் வரை  செல்லவுள்ளது. ரயில் நிலையம் முன்பாக  எதிர்ப்பு மாநாடு நடாத்தப்படவுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில்,  நாட்டின்  எதிர்க் கட்சியின் நடவடிக்கைகளை முன்னெடுக்கும்  பெரும்பாலான அரசியல் கட்சிகள்  உள்ளிட்ட 20 கட்சிகள்,  150 தொழிற் சங்கங்கள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர்.