ஏலம் விடப்படவுள்ள அரசர் சார்லஸ், இளவரசி டயானாவின் திருமண கேக்..!

தற்போதைய அரசரான மூன்றாம் சார்லஸ் மற்றும் இளவரசி டயானா இருவருக்கும் 1981ம் ஆண்டு ஜூலை 29 திகிதி திருமணம் நடந்தது.  எனினும் இருவருக்கும் இடையே பூசல் ஏற்பட்டது. சட்டப்படி விவாகரத்து பெற்றவர்களாக ஆவதற்கு 4 ஆண்டுகளுக்கு முன்பே அவர்களுக்குள் பிரிவு ஏற்பட்டது.

அவர்களது திருமணத்தின்போது, 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கலந்து கொண்டனர். அவர்களில் ஒருவர் நைஜல் ரிக்கட்ஸ். கடந்த ஆண்டு நைஜல் காலமானார். அவர், இந்த திருமணத்தின்போது தயாரிக்கப்பட்ட 41 ஆண்டுகள் பழமையான திருமண கேக்கின் ஒரு பகுதியை பாதுகாத்து வைத்திருக்கிறார்.

அதனை தற்போது ஏலத்திற்கு விட முடிவு செய்துள்ளனர் என நியூயார்க் போஸ்ட் செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது. இதன்படி, இங்கிலாந்தில் டோர் மற்றும் ரீஸ் ஏல அமைப்பு சார்பில் இந்த கேக் ஏலத்திற்கு விடப்படும். கேக் துண்டின் ஏல மதிப்பு 300 இங்கிலாந்து பவுண்டு என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இது ரூ.1.23 லட்சத்திற்கும்  கூடுதலானது. இதனை விட அதிக தொகைக்கு ஏலத்திற்கு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திருமணத்திற்காக 23 கேக்குகள் அப்போது தயாரிக்கப்பட்டு உள்ளன. அவற்றில் பழகேக் ஒன்றின் மைய பகுதியில் இருந்து இந்த கேக் துண்டு வெட்டி எடுக்கப்பட்டிருக்க வேண்டும். அந்த கேக் 5 அடுக்குகளாக 5 அடி உயரம் கொண்டது. இதேபோன்ற மற்றொரு கேக் துண்டு 2014ம் ஆண்டில் 1,375 இங்கிலாந்து பவுண்டு மதிப்புக்கு ஏலம் எடுக்கப்பட்டது.