மகிந்த மற்றும் எரிக்சொல்ஹெய்ம் சந்திப்பு.

நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் சமாதான பிரதிநிதி எரிக்சொல்ஹெய்ம் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.

இலங்கைக்கான விசேட விஜயத்தின் போது எரிக்சொல்ஹெய்ம் மகிந்த ராஜபக்சவை சந்தித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவின்  காலநிலை ஆலோசகராக எரிக்சொல்ஹெய்ம் நியமிக்கப்பட்டுள்ளமைக்கு மகிந்த ராஜபக்ச தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

எரிக்சொல்ஹெய்முடனான பேச்சுவார்த்தைகளின் போது இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழவிடுதலைப்புலிகளிற்கும் இடையிலான மோதல் காலத்தில் சமாதான பேச்சுவார்த்தைகளிற்கு எரிக்சொல்ஹெய்ம் ஆற்றிய பங்களிப்பை நினைவுகூர்ந்துள்ள மகிந்த ராஜபக்ச உள்நாட்டு மோதல் இலங்கையின் பொருளாதாரத்திற்கு ஏற்படுத்திய பாதிப்புகள் குறித்தும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி குறித்து எரிக்சொல்ஹெய்முடன் ஆராய்ந்துள்ள மகிந்த ராஜபக்ச நோர்வேயின் முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்யவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.