பிரித்தானிய மாகாரணி மீதான அக்கறை நாட்டு மக்கள் மீது ஏன் இல்லை’

இலங்கையை அடிமைப்படுத்தி வைத்திருந்த மாகாராணி காலமானதையொட்டி தேசிய துக்க தினத்தை பிரகடனப்படுத்தியுள்ள ஆட்சியாளர்கள், உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் இலங்கையர் 269 பேர் உயிரிழந்த சமயத்தில் தேசிய துக்க தினத்தை அறிவிக்க நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட போராட்டத்தில் சட்டத்தரணிகள் அமைப்பின் ஏற்பாட்டாளர் சட்டத்தரணி மனோஜ் நாணயக்கார, உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுப்பதாக வாக்குறுதி அளித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதுவரை அதனை நிறைவேற்றவில்லையென குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும் காலம் தாழ்த்தாது உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்க தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ள போராட்டத்தில் சட்டத்தரணிகள் அமைப்பின் ஏற்பாட்டாளர் சட்டத்தரணி மனோஜ் நாணயக்கார இலங்கை மக்கள் குறித்த உண்மையான அக்கறை ஆட்சியாளர்களுக்கு காணப்படுமாயின் இதனை நிறைவேற்றுமாறும் வலியுறுத்தியுள்ளார்.