பிரித்தானியாவின் அடுத்த பிரதமராக லிஸ் ட்ரஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்தில் ஆளும் கன்சர்வேடிவ் கட்சித்தலைவர் பதவியை போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்தார். புதிய தலைவர் (பிரதமர்) பதவிக்கான தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக்கிற்கும், அந்த நாட்டின் வெளியுறவு மந்திரி லிஸ்டிரசுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

பிரதமர் பதவிக்கான ஓட்டுப்பதிவு கடந்த 2 ஆம் தேதியுடன் முடிவுக்கு வந்தது. இந்த தேர்தலில் 1.60 லட்சம் கன்சர்வேடிவ் கட்சி உறுப்பினர்கள் தபாலில் அல்லது இணையவழியில் வாக்கு அளித்தனர். பதிவான வாக்குகள் அனைத்தும் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் எதிர்பார்த்தது போலவே லிஸ் டிரஸ் தேர்வு ஆனார். தன்னை எதிர்த்து போட்டியிட ரிஷி சுனக்கைவிட 21 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்ற லிஸ் டிரஸ் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராக தேர்வு ஆனார்.

பிரதமராக தேர்வு ஆன பிறகு பேசிய லிஸ் டிரஸ், கடும் போராட்டத்திற்கு பிறகு பிரதமர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளேன். என் மீது நம்பிக்கை வைத்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். போரிஸ் ஜான்சன், ரிஷி சுனக் ஆகியோருக்கும் எனது நன்றியை தெரிவிக்கிறேன். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன்.

பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான திட்டம் செயல்படுத்தப்படும்” என்றார். இங்கிலாந்து பிரதமர் பதவிக்கான போடியில் வெற்றி பெற்றதையடுத்து ராணி எலிசபெத்தை லிஸ் டிரஸ் சந்திக்க உள்ளார். இங்கிலாந்து ராணி லிஸ் டிரஸ் பிரதமராக தேர்வு ஆனதை முறைப்படி அறிவிக்க உள்ளார். நாளை லிஸ் டிரஸ் பிரதமராக பதவியேற்க கூடும் என்று சொல்லப்படுகிறது.

இங்கிலாந்து பிரதமர் தேர்தலில் ரிஷி சுனக் வெற்றி பெற்றால் வெள்ளையர் அல்லாத முதல் இங்கிலாந்து பிரதமர் என்ற சிறப்பைப் பெறுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. துவக்கத்தில் முன்னணியில் இருந்த ரிஷி சுனக் இறுதி சுற்றுக்களின் போது திடீரென பின்னடவை சந்தித்தார். இதையே கருத்துக்கணிப்பு முடிவுகளும் பிரதிபலித்தன. ரிஷி சுனக் இன்போசிஸ் தகவல் தொழில்நுட்ப நிறுவனர் நாராயணமூர்த்தி, சுதா மூர்த்தி தம்பதியின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது,