மூதூர், பச்சனூர் விபத்தில் மூன்று பெண்கள் உயிரிழப்பு.

திருகோணமலை – மூதூர், பச்சனூர் பகுதியில் உழவு இயந்திரம் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில்  மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

இதில் மேலும் 17 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.