தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரம் இன்று நள்ளிரவு முதல் புதுப்பிக்கப்படவுள்ளது-எரிசக்தி அமைச்சு

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரம் அல்லது QR முறையின்படி வழங்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீடு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு முதல் புதுப்பிக்கப்படவுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது

 

 

மேலும் கடந்த வார தரவுகளை ஆராய்ந்த பின்னர், எரிபொருள்களின் ஒதுக்கீட்டில் செய்யப்படவுள்ள மாற்றங்கள் இன்று அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, QR முறைக்கு வெளியே எரிபொருளை விநியோகிக்கும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தொடர்பில் தேவையான சட்ட மற்றும் நிர்வாக தீர்மானங்களை மேற்கொள்ளுமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர பணிப்புரை விடுத்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.